அமைச்சர் மாறன் உடல் நிலை நல்ல முன்னேற்றம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் மாறனின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமான உணவுகள்உட்கொள்கிறார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் ஒற்றைத் தலைவலி காரணமாக, சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பேஸ் மேக்கர்:
அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு தற்காலிக பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. அது பழுதடைந்ததால் நிரந்தர பேஸ் மேக்கர்கருவி பொருத்தப்பட்டது.
அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் கருவியும் பொருத்தப்பட்டது. லண்டன், ஜெர்மனியிலிருந்து மருத்துவர்கள் வந்தும் அவருக்கு சிகிச்சைஅளித்தனர்.
அவர் உடல் நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்குமாற்றப்பட்டார்.
அப்பல்லோ அறிக்கை:
மாறன் உடல்நிலை குறித்து அபபோலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சர் மாறனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்கு வைக்கப்படிருந்த உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.
மாறன் தினமும் அதிக நேரம் பேப்பர் படிக்கிறார். வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications