மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வானிலை சரியில்லாத காரணத்தால் அந்தமான் சென்ற அலையன்ஸ் விமானம் மீண்டும் சென்னையில்தரையிறங்கியது.
சென்னையிலிருந்து அந்தமானுக்கு அலையன்ஸ் விமானம் வாரத்திற்கு நான்கு முறை சென்று வருகிறது.
திங்கள் கிழமை காலை அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயருக்கு 75 பயணிகளை ஏற்றிக் கொண்டு காலை 6மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் போர்ட் பிளேயர் சென்றடைந்த போது அங்கு வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம்தரையிறங்க இயலவில்லை. அந்தமான் விமான நிலைய அதிகாரிகள் கூறியபடி விமானம் மீண்டும் சென்னைக்குகாலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது.
அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள்செவ்வாய் கிழமை காலை இதே விமானம் மூலம் போர்ட் பிளேயருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும்அலையன்ஸ் விமான அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications