For Quick Alerts
For Daily Alerts
Just In
சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி அமையாது
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி அமையாது என்று வ.கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் நடந்த வ.கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாரதிய ஜனதா மத வெறியை தூண்டும் கட்சியாகும். அதைஎதிர்த்து நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக திமுக வினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக ஆட்சியிலும் ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி அமையும் என்று சிலர் பேசி வருகிறார்கள். வரும் தேர்தலில் 3 வது அணி நிச்சயமாக அமையாது. நாம்இருக்கும் அணியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.
Comments
Story first published: Tuesday, November 28, 2000, 5:30 [IST]