For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோகன் கமிஷன் அறிக்கைக்கு புதிய தமிழகம் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மோகன் கமிஷன் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 6-ம் தேதி கோட்டையை நோக்கி ஊர்வலம்நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசி டாக்டர் கிருஷ்ணசாமி, சமீபத்தில் சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்ட மோகன்கமிஷன் அறிக்கையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கு போராடிய மக்களைகொச்சைப்படுத்தியும், அவர்களின் சாவுக்கான உண்மைக் காரணங்களை மூடி மறைத்தும் செய்திகள் வந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு டிசம்பர் 6-ம் தேதி கோட்டையை நோக்கி ஊர்வலம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அன்று காலை 8.00 மணி தல் 11.00 மணி வரையிலும்,அம்பேத்கார் குருபூஜை நடைபெறும்.

அன்று காலை 11.30 மணிக்கு மேல் மோகன் கமிஷன் அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசைவலியுறுத்தி கோட்டையை நோக்கி ஊர்வலம் நடைபெறும்.

நடிகர் ராஜ்குமார் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர்கள். அவர்களை தேவைஇல்லாமல் விசாரணைக்கு உள்படுத்தக்கூடாது.

ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்த போது கர்நாடக அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாகநடைமுறைப்படுத்த வேண்டும். பெங்களூரில் திருவள்ளூர் சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். வீரப்பனை காட்டில் இருந்து விடு விக்கவும், பழையமனநிலைக்கு கொண்டு வரவும் நடிகர் ராஜ்குமாரையே தூதுவராக அனுப்ப வேண்டும்.

மாஞ்சோலை பிரச்சனையில் இரண்டாவது கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கார் ரத யாத்திரைமூலம் பிரச்சாரம் செய்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி மாஞ்சோலையில் முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X