பா.ம.க. ஆதரவின்றி தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

செந்துறை:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தி.மு.க. தன்னை ஓரம்கட்ட நினைப்பதாக குறை கூறியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமையன்று பெரம்பலூரிலிருக்கும் செந்துறையில் ஆண்டி மடம் சட்டமன்ற தொகுதியினரால் ஏற்பாடுசெய்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், தி.மு.க என்னை ஓரம் கட்ட நினைக்கிறது. பா.ம.க வுடன் பகைமை கொண்டுள்ள சில தலித்கட்சிகளுக்கும் மேலும் சில கட்சிகளுக்கும் தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது.

தி.மு.க. அரசு வரவிருக்கும் தேர்தலில் ஜாதி சண்டையை தூண்டி விட முயற்சிக்கிறது ராமதாஸ் பகிரங்மாக குற்றம்சாட்டினார்.

கூட்டணி தொடருமா?

ராமதாசின் இந்த காட்டமான பேச்சு பா.ம.க வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்குமா என்றசந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பிரச்னைகள் நிலவி வருகிறது.

தி.மு.க., பா.ம.க.இடையே தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் சரி செய்யப்படா விட்டால் பா.ம.க. மீண்டும்அ.தி.மு.க.கூட்டணியில் இணையும் வாய்ப்பு உருவாகும். கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் பா.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம. க. ஆதரவு இல்லாமல் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+