For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மம்தா பானர்ஜி ராஜினாமா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Mamtha Banerjeeபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கடந்த சனிக்கிழமை நடந்த ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிதிங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இருப்பினும் பிரதமர் வாஜ்பாய் அவரது ராஜினாமா கடிதத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வை வாபஸ் பெறக் கோரி மம்தா பானர்ஜியும், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜித்பாஞ்சாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

பிரதமர் வாஜ்பாய் பெட்ரோலியப் பொருட்கள் விலையைப் பரிசீலிப்பதாக உறுதி கூறிய பின் இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்கள் .

தற்போது மம்தா பானர்ஜி மீண்டும் திங்கள் கிழமை காலை 7.30 மணிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில், ரயில் விபத்துக்கு தான் நேரடியாகப் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும் என் மேல் வீண்புகார்கள் வருவதை நான் தவிர்க்க முடியாதகாரணத்தால் ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பஞ்சாப் ரயில் விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X