ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் பஸ் நிலையம் அருகே கான்போரா பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவரும்,இன்னொருவரும் பலியானார்கள். 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடங்கி 7 நாட்கள் ஆகின்றன.
இதற்கிடையே பாரமுல்லா பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை திடீரென்று குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கானபின்னணித் தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
சதி வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications