For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சிவசேனையினர் சொல்வது போல, அது உடனடி வாபசுக்குரிய அறிவிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்,இந்த அறிவிப்பினால், பலன் இல்லாமற் போகலாம் என்பதையும், தாக்குதல் நிறுத்தப்பட்டதை தங்களுக்குச்சாதமாக பயன்படுத்திக் கொண்டு, தீவிரவாதிகள் மேலும் பல கொலைகளை செய்யக் கூடும் என்பதையும் இந்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அம்மாதிரி நிலை தோன்றினால், தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறவும், தீவிரவாதிகள் மீது கடுமையானநடவடிக்கைகளை எடுக்கவும், அரசு தயங்கக் கூடாது.

காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் நம்முடைய அணுகு முறையைப் புரிந்து கொண்டு, நமக்கு ஆதரவுதெரிவிக்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றி வருகிறது.

அதை வலுப்படுத்த இந்தத் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு உதவி செய்யும் என்று நம்பலாம். ஆனால்,தீவிரவாதிகளின் மனதை மாற்றிவிட, பாகிஸ்தானின் முரட்டுத் தனத்தைத் திருத்தி விட, இது உதவும் என்றுஎதிர்பார்க்க முடியாது.

ஆக, இந்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பு என்பது தீவிரவாதிகளுக்கு எதிரான நமது நடவடிக்கைகளுக்கு உலகஅரங்கில் கிடைக்கக் கூடிய ஆதரவைப் பெருக்கிக் கொள்ளக் கூடிய முயற்சி இது. அந்த அளவில்தான் இதுபயன்தரும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.

அதாவது, மீண்டும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மும்முரமடைந்தால், தாக்குதல் நிறுத்த அறிவிப்பு காரணமாகமத்திய அரசு தயங்கி நிற்கக் கூடாது. கடுமையான பதிலடி தர வேண்டும்.

அமைதியான முறையில் தீர்வு காணவே நாங்கள் விரும்பினோம். தீவிரவாதிகளோ எங்கள் நல்லெண்ணத்தைசற்றும் மதிக்காமல் அதையே பயன்படுத்திக் கொண்டு அராஜகங்களைப் புரிய முனைந்தார்கள்.

இந்த நிலையில் தயைதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதுதான் எந்த நாடும் செய்யக் கூடிய காரியம் என்பதுநமது நிலையாக இருக்க வேண்டும். அது உலக அரங்கில் எடுபடும். அதற்கு இந்தத் தாக்குதல் நிறுத்த அறிவிப்புஉதவும்.

இந்த தாக்கதல் நிறுத்தம், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நமது முனைப்பு நிறுத்தம் ஆகி விடக் கூடாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X