இளங்கோவன் நிகழ்ச்சியை ரத்து செய்தார் சோனியா
சென்னை:
தமிழகத்தில் இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்த தன் பிறந்த நாள் விழாவை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார்.
இந்த மாதம் 9-ம தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள் விழாவை கொண்டாட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் திட்டமிட்டிருநந்தர் அதன் படி அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு புதிய நீதிக் கட்சி தலைவர் சண்முகத்திற்கும், மக்கள் தமிழ் தேச கட்சி தலைவர் கண்ணப்பனுக்கும் அழைப்புஅனுப்பியிருந்தார். கண்ணப்பனும், சண்முகமும் தமிழகத்தல் மூன்றாவது அணி அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறரார்கள். இதன் காரணமாகஅவர்களுக்கு அழைப்பு அனுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இவர்களுக்கு அழைப்பு அனுப்பியதால் அ.தி.மு.க வுடனான உறவுகள் பாதிக்கப்படும் என தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினர்.
இதைத் தொடர்ந்து சோனியா காந்தி இளங்கோவனை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கண்ணப்பனுக்கும், சண்முகத்திற்கும் அழைப்பு அனுப்பியதற்கு கண்டனம்தெரிவித்தார். தான் கலந்து கொள்வதாக இருந்த விழா நிகழ்ச்சியையும் ரத்து செய்தார்.