பிணத்தை வாங்காமல் ஒரு போராட்டம்
கோவை:
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானதைத் தொடர்ந்து, அவரது பிணத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள்திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அருகே உள்ள வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் கூலி வேலைபார்த்து வந்தார். கரும்புத் தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்திருந்தது அறியாமல், அதனை மிதித்தார். இதில் அந்தஇடத்திலேயே அவர் இறந்து போனார்.
தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு பிரதேப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இவரது பிணத்தை வாங்க மறுத்து விட்டனர். அவர்இறந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு தோட்டத்தின் உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்துவைத்தனர். பின்னர் உறவினர்கள் பிணத்தைப் பெற்றுச் சென்றனர்.