சீனா: நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 45 பேர் பலி
பீஜிங்:
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 45 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்குச் சீனாவின் சான்ஷிக் பகுதியில் உள்ள டயன்லாங்க் நிலக்கரிச் சுரங்கத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, சியூ ஹையர்லாங்க் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வெடிவிபத்து குறித்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்ய முயன்றபத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கிய சாய் சின்ஸ் என்ற 27 வயது நிலக்கரிச்சுரங்க ஊழியர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பத்திரிக்கையாளருக்கு 8,500 யான்கள் கொடுக்க நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வருடம் மட்டும் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சீனாவில் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்களுக்குச் சுரங்க வேலைகள் குறித்து போதிய பயிற்சி அளிக்கவும், விபத்துஏற்படாமல் தடுக்கவும் பல மாற்றங்களைச் செய்யத் தீர்மானித்திருக்கிறது நிலக்கரிச் சுரங்க நிர்வாகம்.
யு.என்.ஐ.