அமைச்சர் நீக்கம் ஏன்? புதுவை முதல்வர் விளக்கம்
பாண்டிச்சேரி:
எந்த வித வற்புறுத்தலுக்காகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றுபாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து கண்ணன் நீக்கப்பட்டதால் அமைச்சரவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. யாருடையை வற்புறுத்தலுக்காகவும் அவர்நீக்கப்படவில்லை.
ஒரு அமைச்சர் என்பவர் தனது பொறுப்புக்களை உணர்ந்து, சட்டசபையின் வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் கண்ணனோ சபைவிதிமுறைகளை மீறி நடந்து கொண்டார். அதனால் தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.
முன்னதாக, சபாநாயகர் சுப்ரமணியம் கூறுகையில், தேனி ஜெயக்குமார் என்னிடம் ஒரு மனுக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர், அமைச்சர்ஜெயக்குமாருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு வெறும் வதந்தியாகும்.
அந்தப் பேச்சில் சிறிதளவும் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இது எனது கொளரவத்துக்கு ஏற்பட்ட இழுக்கு. என் மீதுஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி அமைச்சர் கண்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து பரிசீலிக்கப்படும்என்று கூறினார் சபாநாயகர் சுப்ரமணியம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications