முன் ஜாமீன் கோரி மதுரை துணை மேயர் மனு
சென்னை:
நிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மதுரை துணை மேயர் மிசாபாண்டியன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெகதீசன் என்பவர் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். அந்தகொலையில் மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுககும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தன் மனுவில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 18-ம் தேதி ஜெயகாளியம்மன் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெகதீசனை செல்வம், ஆறுமுகம் மற்றும்வேறொருவரும் சேர்ந்து அவரது அலுவலத்திலேயே கொலை செய்து த்ப்பி விட்டதாக பாண்டியராஜன் என்ப்வர்போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட பைப் குமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். போலீஸ் விசாரணையில்,வரிச்சியூர் செல்வம்தான் இந்த குற்றத்தை செய்ய தூண்டியதாக கூறியுள்ளார். வரிச்சியூர் செல்வம் திருமங்கலம்நீதிபதி முன் நவம்பர் 22-ம் தேதி சரணடைந்தார். நான்தான் கொலை செய்யத் தூண்டினேன் என்று போலீஸில்வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.
தி.மு.க தலைமைக்கும் தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரிககும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகாரணமாக அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
நான் அதை மீறி அழகிரியுடன் நட்பு கொண்டிருந்தேன். அழகிரியின் ஆதரவாளர்களை போலீசார் கொடுமைப்படுத்தி வந்தினர். அதை நான் எதிர்தது வந்தேன். இதன் காரணமாக என் மேல் கோபம் கொண்டிருந்த போலீஸ்துணை கமிஷனர் என்னை பழிவாங்க காத்திருதார். அவர் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி என்னைகுற்றவாளியாககுகிறார்.
வரிச்சியூர் செல்வம் என் மீது கூறியுள்ள புகார்கள் திட்டமிட்டு கூறப்பட்டவை. உள்நோக்கம் கொண்டவை.போலீசார் சேகரித்துள்ள பொருட்கள் எல்லாம் என்னை இந்த கொலையில் சம்பந்தப்பட வேண்டும் என்றநோக்கத்துடன் ஜோடிக்கப்பட்டவை.
என்னை தவறான காரணங்களால் கைது செய்தால் என்னை துன்புறுத்துவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்துவரலாம். எனவே என க்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.