பஸ் விபத்து: இறந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்கள்குடும்பங்களுக்கு ரூ 20 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துளளார்.
புதன் கிழமை பிற்பகல் தர்மபுரி மாவட்டம் அருகே இருக்கும் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து லாரியுடன்மோதி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் இறந்தனர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தனியார் வாகன விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் ரூ 10 ஆயிரம் நிவாரண நிதியாகஅளிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இப்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ 10 ஆயிரம்அளிக்கப்படுகிறது. ஆக இறந்தவர் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ 20 ஆயிரம் வழங்கப்படுகிறது












Click it and Unblock the Notifications