டிச. 24-ல் எம்.ஜி.ஆர். நினைவு நாள் பேரணி
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி இம்மாதம் 24-ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார். ஆண்டு தோறும் அந்த தினத்தன்றுஅ.தி.மு.க,வினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் இம்மாதம் 24-ம் தேதி அமைதி ஊர்வலத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தின் அறிக்கையில்தெரிவிக்கப்படிருக்கிறது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அ.இ.அ.தி.மு.க.வின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்த நினைவு நாள் இந்த மாதம் 24-ம் தேதி வருகிறது. அன்று அண்ணாசாலையில் இருக்கும்அண்ணா சிலையிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெறும்.
காலை 9 மணியளவில் இந்த ஊர்வலம் தொடங்கி கடற்கரையிலிருக்கும் எம்.ஜி.ஆர் சமாதியை சென்றடையும்.
அமைதிப் பேரணியில் தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டு எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
பின்னர் எம்.ஜி.ஆர். நினைவக வளாகத்தில் மேற் கொள்ளப்படவிருக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications