கருணாநிதியை மிரட்டுகிறார் ராமதாஸ் .. த.ரா.கா.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் கருணாநிதியை மிரட்டுகிறார் என தமிழக ராஜீவ் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கிள்ளிவளவன் தெரிவித்திருக்கிறார்.
பா.ம.க. நிறுவனர் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் தமது கட்சி கூட்டணியை விட்டு விலகும் என கூறியிருந்தார். அதற்குபதிலளித்து தமிழக ராஜீவ் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் கிள்ளி வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வாழப்பாடியும், பா.ம.க.வும் ஒரே கூட்டணியில் நீடிக்கமுடியாது,
வாழப்பாடியை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என ராமதாஸ் கருணாநிதியுடன் 4 முறை நேரில் பேசியதாகவும், 3 முறை கடிதம் எழுதியதாகவும்கூறியிருந்தார்.
அவ்வாறு நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விடுவோம் எனவும் கூறியிருந்தார்,
எந்த ஒரு கூட்டணியிலும் நீடிப்பதும், விலகுவதும் கொள்கை ரீதியானது. தனிப்பட்டவர்கள் முடிவைப் பொறுத்து கூட்டணி அவைதில்லை. பொதுவானஉடன்பாட்டின் அடிப்படையில் தான் அமைகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் ராமதாஸ்தான். ஆனாலும் அவர் கூட்டணியில் நீடித்தால் நாங்கள் விலகி விடுவோம்என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை.
முதல்வரை மிரட்டுகிறார் ராமதாஸ்:
ராமதாஸ் தமிழக முதல்வரை மிரட்டுகிறார். அவரது இந்த மிரட்டல் கூட்டணியை பலவீனப்படுத்தும் திட்டம், இது திட்டமிட்ட சதி என்பதில் எந்த விதசந்தேகமும் கிடையாது.
சென்ற சில மாதங்களாக ராமதாஸ் தி.மு.க.ஆட்சியை குறை கூறியும், கருணாநிதியை பகிரங்கமாக விமர்சித்தும் வருகிறார். அவரது செயல்கள் அவர்யாரிடமோ விலை போய் விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.
கூட்டணியை விட்டு விலகுவது என பா.ம.க. முடிவு செய்து விட்டது. அதற்கான காரணத்தை தேடி வருகிறார் ராமதாஸ். அதன் விளைவுதான் இது போன்றமிரட்டல் அறிக்கைகள்.
ராமதாசின் செயல்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. ராமதாசின் அடையாளம் நாட்டு மக்களுக்கு நன்கு தெளிவாக தெரிந்து விட்டது.சோரம் போவது என முடிவெடுத்துவிட்டால் அதை தடுக்க யாராலும் முடியாது.
ராமசதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தாலும் விலகினாலும் நாங்கள் அந்த கூட்டணியில் நீடிப்போம். பா.ம.க. கூட்டணியை விட்டு விலகினால் அதுஎந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் எங்கள் கட்சி இறங்காது என தெரிவித்தார்,
-
விருத்தாசலத்தில் பிரேமலதாவை எதிர்க்கும் பாமக வேட்பாளர் யார்? 15 தொகுதிகளுக்கு இன்று அறிவிப்பு -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?











Click it and Unblock the Notifications