"ராமதாஸ் துரோகத்தை ஜெ. மறக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமதாஸ் செய்த துரோகத்தை ஜெயலலிதா மறக்கவில்லை. எனவே அ.தி.மு.க அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர முடியாது என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், பா.ம.க தலைவர் ராமதாஸ் அ.தி.மு.க அணியில் சேரப் போவதாக அவரே செய்தி பரப்பினார். ஆனால்அவரால் அ.தி.மு.க அணியில் சேர முடியாது.

பா.ஜ.க மத்திய அரசில் பா.ம.க அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அதை இழந்து ராமதாஸ் வெளியே வர மாட்டார். மேலும் அ.தி.மு.கவுக்குராமதாஸ் செய்த துரோகத்தை ஜெயலலிதாவும் மறக்கவில்லை.

புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம் ஆகியவை மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யக் கூடாது. அ.தி.மு.க தலைமையிலானமதச்சார்பற்ற அணியில் சேர வேண்டும் என்று அவர்களை அழைக்கிறேன். மதச்சார்பற்ற அணியை பலப்படுத்த வேண்டும்.

ஜெயலலிதாவும், மூப்பனாரும் மூன்றாவது அணி உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+