2002-ல் தயாராகும் மதுரை ஹைகோர்ட் கிளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ஹைகோர்ட் கிளை வரும் 2002 ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் கூறினார்.
மதுரை ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் அலுவலகக் கட்டிடம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மதுரை ஹைகோர்ட் கிளை 2002 ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். சனிக்கிழமை நீதிமன்றங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற சென்னைஹைகோர்ட்டின் முடிவுக்கு வக்கீல்களிடையே எதிர்ப்பு உள்ளது.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு என்பதை வக்கீல்கள் உணர வேண்டும்.மேலும் சிறைச்சாலை நீதிமன்றங்களில் சிறிய வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றார் நீதிபதி ஜெயின்.












Click it and Unblock the Notifications