புத்தாண்டு கொண்டாட வந்த 4 பேர் பலி
எர்ணாகுளம்:
புத்தாண்டை பெங்களூரில் கொண்டாட கேரளாவிலிருந்து சென்ற வாலிபர்களில் நான்கு பேர் விபத்தில் இறந்தனர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம், மனுப்பாடியைச் சேர்ந்த 10 பேர் புத்தாண்டை பெங்களூரில் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக மாருதி வேன் ஒன்றில்புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சேலம் அருகே உள்ள ஓமலூர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து சிறிய அளவிலான கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியும், மாருதி வேனும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மாருதி வேனில் பயணம் செய்த சிக்காபு (21), சுதீர் (25), அமீர் (23), செமீர் (22), ஆகிய நான்கு பேரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
மேலும், இந்த வேனில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரைக் கைது செய்து விசராணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications