கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ 15 கோடி
சென்னை:
கொத்தடிமை கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 7,500 பேர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ 15 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்குமுதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கிண்டியிலும், திருநெல்வேலியிலும் அதிவேகத் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காநிறுவனத்திற்கு ஒரு 1.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பத்தை முன்னேற்றும் விதத்தில் ரூ 2 கோடியை அரசு ஏற்கனவேஒதுக்கியுள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்தி விட்டு மீட்கப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கே திரும்பி வந்துள்ள 7500 பேரின்நலனிற்காக ரூ 15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications