தமிழகத்தில் செஸ் அகாடமி துவக்க ஆனந்த் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் செஸ் அகாடமி துவங்கவிருப்பதாக உலக செஸ் சாம்பியன் விஸவநாதன் ஆனந்த் தெரிவிததுள்ளார்.

டெஹ்ரானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக சாம்பியனான விஸ்வநாதன்ஆனந்துக்கு தமிழ்நாடு செஸ் சங்கத்தின் சார்பாக பாராட்டுவிழா நடத்ப்பட்டது.

இதற்காக ஆனந்த் அவரது வீட்டிலிருந்து பாராட்டு விழா நடந்த அரங்கம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆனந்த்ஊர்வலமாக வந்த வழி எங்கும் பள்ளி மாணவ மாணவிகள் அவரை வாழ்த்தி எழுதப்பட்டிருந்த வாழ்த்துஅட்டைகளை தூக்கிப் பிடித்து ஆனந்தை பாராட்டினர்.

பொதுமக்களும், அந்த வழியே வாகனங்களில் சென்றவர்களும் ஆனந்தை பார்த்து கையசைத்து வாழ்த்துதெரிவித்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் இமேஜ் அரங்கத்தில் நடந்த பாராட்டு விழாவில் சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆனந்தை பாராட்டினார். ஆனந்துக்குவெற்றிக் கிரீடம் சூட்டப்பட்ட அவருக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்சியில் ஆனந்த் பேசியதாவது:

சென்னை நகர வீதிகளில் ஊர்வலமாக வந்த போது உலக அரசன் போல் உண்ர்ந்தேன். இது மறக்க முடியாதஅனுபவம். டெஹ்ரானில் உலக சாம்பியன் பட்டம் வென்றவுடன் அங்குள்ள இந்தியர்கள் என்னை வந்துவாழ்த்தியதும் மறக்க முடியாதது.

ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தமிழகத்தில் செஸ் அகாடமி துவங்க இருக்கிறேன். இந்தஅகாடமியின் செயல்பாட்டை நானே நேரில் கவனிக்க இருப்பதால் தற்போதைக்கு இதை துவக்கும் திட்டம்இலலை. கிரிக்கெட் சூதாட்டம் பற்றி எதுவும் கூறவில்லை என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+