ஒளிப்பதிவாளர் மனைவி சாவில் மர்மம்
சென்னை:
காதல் திருமணம் செய்த சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி தீயில் கருகி இறந்தார். இவர் எப்படி இறந்தார்என்பதில் மர்மம் நீடிக்கிறது.
நடிகர் மாதவன் நடித்து தற்போது தயாரிப்பில் இருக்கும் மின்னலே படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர்ஆர்.டி.ராஜசேகர்.
இவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனனிடம் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். பி.எஸ்.சி.படித்திருக்கும் இவர்ஒளிப்பதிவு டிப்ளமோ பட்டம் பெற்று சென்னை கே.கே.நகர் ஜவஹர் தெருவில் வசித்து வருகிறார்.
ராஜசேகரின் மனைவி பெயர் விஜயலட்சுமி (29). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து கடந்த 2வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே விஜயலட்சுமி தீயில் கருகி பலத்த காயங்களுடன், சென்னை வடபழனியில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றிவிஜயலட்சுமி புதன்கிழமை பரிதாபமாக இறந்தார்.
பால் காய்ச்சும் போது, சேலையில் தீப்பிடித்ததில் இந்த விபரீதம் நடந்ததாக விஜயலட்சுமியின் கணவர் தரப்பில்போலீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயலட்சுமியில் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர்கள்தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருந்த விஜயலட்சுமிக்கு அபார்ஷன் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவரது கணவர் ராஜசேகர்கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் புகாரில் கூறி இருக்கிறார்கள். இதனால் விஜயலட்சுமி சாவில் மர்மம்நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications