பா.ஜ.க தேசிய செயற்குழு இன்று கூடுகிறது
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் 2 நாட்கள் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை துவங்குகிறது.
பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் கட்சியின் நிலை குறித்துவிவாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியில் புதன்கிழமை பாரதீயஜனதா தலைவரா பங்காரு லட்சுமணன் தெரிவித்திருப்பதாவது:
பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை முதல் 2 நாட்கள் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில், தமிழகம், கேரளா, அசாம்,பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம். உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிவிவாதிக்கப்படும்.
சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அரசியல் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் உளதுறை அமைச்சர் அத்வானி கலந்து கொள்கிறார். பொருளாதாரதீர்மானத்தின் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பங்கேற்பார். மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசனைசெய்யப்படும். ஜம்மு- காஷ்மீர் சண்டை நிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலை பற்றியும் விவாதிக்கப்படும்.
இது தவிர பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த ஆசிரியர் பிரிவு, டாக்டர்கள் பிரிவு என்று மேலும் 15 துணை அமைப்புக்களை உருவாக்குவதுபற்றியும் செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.