For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓசூரை கலக்கிய காட்டு யானைகள்

By Staff
Google Oneindia Tamil News

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள செகன்ட் மெட்ராஸ் கிராமத்திற்குள் திடீரென்று 48 யானைகள் புகுந்து விட்டன. கிராம மக்கள் தாரை, தப்பட்டைகள் அடித்துயானைகளை விரட்டினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசூரை அடுத்துள்ள செகன்ட் மெட்ராஸ் கிராமத்தின் தைலத்தோப்பில் ஒரு பெரிய யானைக்கூட்டம் புகுந்தது. அவற்றில்மொத்தம் 48 யானைகள் இருந்தன. தைலத்தோப்பில் யானைகள் புகுந்தது குறித்து கிராம மக்களுக்கு செய்தி பரவியது.

இதையடுத்து 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார்அங்கு வந்தனர். பொதுமக்கள், போலீஸாரிடம் வானில் துப்பாக்கியால் சுட்டு யானைகளை விரட்டும்படி கூறினர். ஆனால் போலீஸார் மறுத்துவிட்டனர்.

பின்னர் போலீஸார் அறிவுரைப்படி, பொதுமக்கள் தாரை தப்பட்டைகளை அடித்து யானைகளை விரட்டினர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இங்கு வந்த யானைகள் அனைத்தும் கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் இருந்து வந்தன என்று கண்டு பிடிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X