ஸ்ரீநகர் விமான நிலைய தாக்குதல் .. 5 பேர் கைது
ஸ்ரீநகர்:
லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பினரால் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகர் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 3 அரசு அலுவலர்கள் உட்பட 5பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்கிழமை லஷ்கர் - இ- தொய்பா அமைப்பின் தற்கொலை படையினர் அதிககாவல் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் 6தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர்.
இது தொடர்பாக 3 அரசு அலுவலர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் பன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அதிரடிப்படை.யினர் வனத்துறை ஓட்டுனரை கைதுசெய்திருக்கிறார்கள். இந்த வாகனம் மூலமாகத்தான் தீவிரவாதிகள் விமானநிலையத்தை அடைந்திருக்கிறார்கள். இரண்டு வனத்துறை ஊழியர்களும், இரண்டுமோட்டார் மெக்கானிக்குகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த 5 பேரும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்தசம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு காலதாமதமாகும்.
ஆனால் நிச்சயம் டிரைவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கும் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications