மனைவி, கள்ளக் காதலனைக் கொன்றவர் கைது
திருவள்ளூர்:
மனைவியின் கள்ளக்காதலை கண்டு ஆத்திரமடைந்து, இருவரையும் கொன்றவர் கைதுசெய்யப்பட்டார்.
திருப்பதியில் கோழிக்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் மோகன் (34).இவர் செவ்வாய்க்கிழமை தனது ஊரான திருவள்ளூர் மாவட்டம் யு.ஆர்.ஆர் கண்டிகைகிராமத்திற்கு திரும்பி வந்தார்.
மோகனின் மனைவி பொன்னியம்மாள் (25) மோகனுடன் சண்டை போட்டு விட்டுஜனவரி மாதம் 12-ம் தேதி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் தன் மனைவிஅவரது முறைமாமனுடன் உறவு வைத்திருப்பதைக் கண்ட மோகன் கடும் கோபம்கொண்டு தனது மனைவியையும், அவரது மாமன் கொண்டையாவையும் (60)கடுமையாக தாக்கி கொலை செய்தார்.
இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்ததது. கொண்டையாவின் மனைவிராஜம்மாளையும் மோகன் தாக்கினார். அதில் அவர் படுகாயமடைந்தார். அவர்தற்போது திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications