இனிமேலும் இது நடக்கக் கூடாது
ஒரு வழியாக கோர்ட்டில் சரணடைந்து விட்டார் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன்.
மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் தனது அலுவலகததில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வழக்கமான கொலைதான் என்று வரிச்சியூர் செல்வம் என்பவர் போலீஸ் சரண்அடையும் வரை பொதுமக்களுக்கும்,போலீஸாரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
வரிச்சியூர் செல்வம் போலீஸில் கொடுத்த வாக்குமூலம் மதுரையை மட்டுமல்லாது, தமிழகத்தையே பரபரப்பில்ஆழ்த்தியது. மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செய்தேன் என்றுசெல்வம் தனது வாக்குமூலத்தில் கூறினார்.
இதையடுத்துவரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட பலருடன், கொலைத் திட்டம் தொடர்பாக மிசா. பாண்டியன்செல்போன் மூலம் பேசியதை போலீஸார் கண்டுபிடித்தனர். கொலைத் திட்டத்தை வகுப்பதற்காக தனது மாநகராட்சிஅலுவலகத்தை பாண்டியன் பயன்படுத்தியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து மிசா.பாண்டியன் தலைமறைவானார்.
போலீஸார் மிசா. பாண்டியனைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் அவர் சிக்கவில்லை. போலீஸாரும்விடவில்லை. கிடுக்கிப் பிடி போட்டு அவரைப் பின் தொடர்ந்தனர். தமிழகத்திற்குள் தலைமறைவாக இருந்த மிசா.பாண்டியன் கர்நாடக மாநிலம் மைசூரிலும் ஒரு இடத்தில் தங்கியிருந்தார்.
மிசா. பாண்டியனுக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததாக முதலில் 5 பேரை ஜனவரி 15-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். அதற்கு அடுத்த நாளே மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூலம் மிசா. பாண்டியன்இருக்கும் இடத்தை ஓரளவு போலீஸார் ஊகித்தனர். ஆனால் அவர்களிடம் சிக்கும் முன்பே, ஜனவரி 17-ம் தேதிசெங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மிசா. பாண்டியன் சரண் அடைந்தார்.
இப்போதைய கேள்வி, ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையில் எழுந்த குற்றச்சாட்டுக்குப் பயந்து, பொறுப்பானபதவி வகிக்கும் ஒருவர் இப்படி, ஓடி, ஒளிந்தது அவசியம்தானா?, இதனால் அவர் வகித்து வரும் பதவிக்கு இழுக்குஏற்பட்டுள்ளதே, இது அந்தப் பதவிக்கு பெருமை சேர்ப்பதாகுமா? என்பதுதான்.
புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தால் கூட அதை தவறென்று நிரூபிக்க ஜனநாயக முறையில் பலவழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம், மண்ணில் போட்டு மூடிவிட்டு, அலட்சியமாக, பொறுப்பானபதவியை அவமானப்படுத்தும் விதமாக மிசா. பாண்டியன் ஓடி, ஓளிந்தது, அவருக்கு மட்டுமல்லாது, துணை மேயர்என்ற பாரம்பரியமான பதவிக்கும் தீராத இழுக்கைத் தேடித் தந்து விட்டது.
தொடர்ந்து மூன்று மாநகராட்சிக் கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் (துணை மேயர் பதவியும் கவுன்சிலர் பதவியாகவேகருதப்படுகிறது) இருந்தால் அவரது பதவி தானாகவே பறி போய் விடும். ஆனால், கொலைக் குற்றவழக்கில்சம்பந்தப்பட்டு, மாநகராட்சி அவையையும் மதிக்காமல், தலைமறைவாக ஓடி ஒளிந்த மிசா. பாண்டியனின்பதவியைப் பறித்திருக்க வேண்டும் என்றுதான் மதுரை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மிசா. பாண்டியன் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இது முதல் முறையல்ல. மதுரையிலுள்ள செளராஷ்டிரா கூட்டுறவுவங்கியைத் தாக்கியது, மேயர் குழந்தைவேலுவுடன் மோதியது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோட்டில்கட்டணம் வசூலித்தவரை தாக்கியது என பல சம்பவங்களில் அவரது பெயர் அடிபட்டுள்ளது.
திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அவர் மீது இருந்த பல்வேறு புகார்கள் காரணமாககொலைச் சம்பவத்திற்கு முன்புதான் மிசா. பாண்டியன், திமுக மேலிடத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் மிசா. பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக மேலிடம்மெளனம் சாதித்ததும், பொதுமக்களால் விமர்சிக்கப்படுகிறது. அவரை கட்சியை விட்டே நிரந்தரமாக நீக்கியிருக்கவேண்டும் என்ற கருத்துத்தான் மதுரை மக்களால் தினசரி விவாதிக்கப்படும் அம்சமாக இருந்தது.
எப்படியோ, சட்டத்தை மதித்து, இப்போதாவது மிசா. பாண்டியன் சரண் அடைந்திருக்கிறாரே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பொறுப்பான பதவியில்இருப்பவர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சிகளின் பொறுப்பு. அப்போதுதான், மக்களிடம் நல்ல பெயர் ஈட்டமுடியும்.
நல்ல பெயரை வாங்குவது கடினம், ஆனால் கெட்ட பெயரை எடுத்துக் கொள்வது மிக எளிது. இதைத் தெரிந்துகொண்டால், சமூகத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிக நல்லது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications