குஜராத் நிலநடுக்கத்தில் 500 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சூரத்:

இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 மாடிக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தவிர குஜராத் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஒரு பக்கம் இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்பட்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்றுஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத் நகரிலுள்ள உமா பவன் அருகிலுள்ள கிருஷ்ணா காம்பிளக்சில் உள்ள 10 மாடிக்கட்டிடம் நிலநடுக்கத்தால் விழுந்து தரைமட்டமானது. இதில் 10 பேர்சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது.

கோல்பத் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். சூரத் மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர்இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப்பிரதேசம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா மற்றும் ஏதென்ஸ்சில்ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 1999 ம் வருடம் மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 100 க்கும் மேற்பட்டோர்இறந்தனர். மகாராஷ்டிராவில் 1993 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் இறந்தனர். 30,000 வீடுகள் இடிந்து விழுந்தன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+