ஸ்டெபி - அமிர்தராஜ் போட்டி கைவிடப்பட்டது ஏன்?
மும்பை:
மூன்று வருடங்களுக்கு முன் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜூக்கும், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெபி கிராபுக்கும் இடையேநடக்கவிருந்த டென்னிஸ் போட்டி பல காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்த விளையாட்டுப் போட்டி ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து, விஜய் அமிர்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், மூன்று வருடங்களுக்கு முன் விளையாட்டுப்போட்டி அமைப்பாளர் ஒருவர், நானும், ஸ்டெபி கிராபும் விளையாடும் வகையில் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எப்போது விளையாட வேண்டும்? எங்கே விளையாட வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதில் கலந்து கொள்வதற்காகஸ்டெபி கேட்ட சம்பளத்தையும் தர அவர்கள் தயாராக இருந்தார்கள்.
ஆனால் ஸ்டெபி கிராப் கூறுகையில், நான் தான் இந்த விளையாட்டில் ஜெயிப்பேன். விஜய் அமிர்தராஜ், கடின முயற்சி செய்து விளையாடுவது போல் நடிக்கவேண்டும். அவர் என்னிடம் தோற்க வேண்டும் என்று கூறினார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் அந்த விளையாட்டுகைவிடப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications