ஜெய்ப்பூரில் கலவரம்: 18 பேர் காயம்
ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.
ஜெய்ப்பூர், சுபாஷ் செளக் பகுதி அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் 18 பேர் காயமடைந்தனர்.அவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சைக்குபின வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் ராஜஸ்தான் ஆயுதப்படை போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, 4 கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள் அப்பகுதியில்முன்னெச்சரிக்கையாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் இருபிரிவினரின் தலைவர்களையும் அழைத்து பேசி அமைதி நிலவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது அமைதி நிலவும் அப்பகுதியில் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என அரசின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications