பாகிஸ்தானில் தேர்தலை புறக்கணிக்கும் இந்துக்கள்
டெல்லி:
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் பாகிஸ்தான் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லீம் அல்லாதவர்களுக்கு என தனியாக உள்ள தேர்தல் முறைக்கு எர்ப்பு தெரிவித்து இந்த புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக் 1985ல் கொண்டுவந்த இந்த தேர்தல் முறையின் படி முஸ்லீம்கள் அல்லாதோர் அவர்களுடையமதத்தினருக்கு ஆதரவாக மட்டுமே ஓட்டளிக்க முடியும்.
இதனை மாற்ற ஒப்புக் கொண்ட தற்போதைய ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப் இது பற்றி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
எனவே, கடந்த டிசம்பரில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் முஸ்லீம் அல்லாதோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்போதைய 2ம் கட்ட தேர்தலையும் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications