For Daily Alerts
Just In
ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது
சண்டிபூர்(ஒரிசா):
இந்தியாவின் அதிநவீன ஆகாஷ் ஏவுகணை சண்டிபூர் ஏவுகணைத் தளத்தில் இருந்துவெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்தியாவின் ஏவுகணைளைமேம்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாதக ஆகாஷ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி 36 நிமிடத்திற்கு சண்டிபூர்ஏவுகணை தளத்தில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக பரிசோதனைசெய்யப்பட்டது.
இந்த ஏவுகணை தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளை 25 கிலோமீட்டர்தூரம்வரை சென்று தாக்கக்கூடியது. இது பல இலக்குகளை தாக்கும் வல்லமைபடைத்தது என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 27, 2001, 5:30 [IST]