For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய் மோசடி: 4 லட்சம் சுருட்டியவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென் னை:

துபாயில் வே லை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை குற்றப் பிரிவு போலீஸார்கைது செய்தனர்.

கன்னியாக்குமரி மாவட்டம் குதிரைச்சி வி ளை என்ற பகுதி யைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவர் துபாயில் வே லைபார்த்து வந்தார். அங்கு அவர் வே லை பார்த்து வந்த நிறுவனத்திலேயே சென்னை நங்க நல்லூ ரைச் சேர்ந்த தேவஇரக்கம் என்பவரும் வே லை பார்த்தார். ஒரே மாநிலம் என்பதால் இருவரும் நண்பர்களாகப் பழகினர்.

இந்த நிலையில் காண்டிராக்ட் முடிந்து 1998-ம் ஆண்டு இருவரும் தமிழகம் திரும்பினர். சென்னை வந்த தேவஇரக்கம் தனது சொந்த ஊரான சீர்காழிக்குப் போய் விட்டார். இந்த நிலையில், ஜெபமணியும், தேவ இரக்கமும்,சென்னையில் நடந்த தனியார் நிறுவன நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட போது மீண்டும் சந்தித்தனர்.

அப் போது, துபாயில் 10 பேர் வ ரை வே லைக்குத் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் வே லைக்கு சேர்த்துவிடுவதாகவும் தேவ இரக்கம் கூறியுள்ளார். இதையடுத்து தனது நண்பர்கள் 11 பேரிடம் ரூ. 4.88 லட்சம் பணத் தைவசூல் செய்து தேவ இரக்கத்திடம், ஜெபமணி கொடுத்துள்ளார்.

பணத் தை வாங்கிய தேவ இரக்கம், வே லை குறித்து மூச்சே காட்டவில்லை. பலமுறை பணத்தைத் திருப்பித்தருமாறு கோரியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, ஜெபமணி, சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில், தேவ இரக்கத் தை, சப் இன்ஸ் பெக்டர் சின்னச்சாமி கைதுசெய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X