ஐ.ஏ.எஸ்.அதிகாரி பாண்டேக்கு மார்ச் 2ல் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹெச்.எம்.பாண்டே மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு மார்ச் 2 ம் தேதி அறிவிக்கப்படஉள்ளது.
தமிழக அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்த ஹெச்.எம்.பாண்டே மீது ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
சென்னை, முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை திங்களன்று முடிவடைந்தது. இதனைஅடுத்து தீர்ப்பை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications