புகை பிடிக்காதீர் ... அபராதம் கட்டாதீர் ...
பனாஜி:
இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் கோவாவில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ5000 அபராதம் விதிக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது.
கோவாவில் சுற்றுப்புறச் சூழலை மிகவும் நன்றாக வைத்துக் கொள்ளும் விதத்திலும் பசுமை எழில் கொஞ்சம்மாநிலமாக மாற்றும் விதத்திலும் புகை பிடிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது கோவா அரசு.
அதாவது, 1997 ம் ஆண்டு தொடங்கப்பட்ட புகைபிடிப்பதற்கான தடைச் சட்டத்தையும், 1996 ம் ஆண்டு உருவானமாசுக்களை கட்டுப்படுத்தும் சட்டத்தையும் பின்பற்ற கோவா அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளர் அசோக் நாத் இந்தத் திட்டங்களை பின்பற்றுவது குறித்து பலருடன்ஆலோசித்தார். பின்னர் அவர் கூறுகையில், ஏற்கனவே, கோவாவில் பொது இடங்களில் புகை பிடிப்போரிடம்அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் ரூ 5, 000 வசூல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் மாநிலத்தின் முக்கியப் பொது சாலைகளிலும், புகை பிடிக்காதீர் என்ற அறிவிப்புப் பலகைகள்வைக்கப்படும். ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்படும்.
கல்வி நிலையங்கள் மூலம், புகையிலை உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பள்ளி குழந்தைகளுக்குஎடுத்துரைக்கப்படும். பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு கோவாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தும் அது எதிர்பார்த்தவெற்றியைத் தர வில்லை. அதனால் மீண்டும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிப்போம்என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications