திருச்சியில் மேம்பாலம் கட்ட ரூ 207 லட்சம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பார் மற்றும் உத்திராட்சக் கொம்பாய் ஆறுகள் அருகே மேம்பாலம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ 207 லட்சம்ஒதுக்கீடு செய்துள்ளாக மாவட்டக் கலெக்டர் மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த இரண்டு ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதால், சிருங்காநகர், திருப்பத்தூர், முசிறி மற்றும் துறையூரில் உள்ள மக்கள் பயனடைவார்கள்.
மேலும் கிராமப்புறங்களில் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு ரூ 3.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி மார்ச் மாதம் 3 ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சியில் அவர், மாநில அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications