குடிநீரில் பாதரசம் கலக்கும் நிறுவனம் மூடல்
கொடைக்கானல்:
இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு சொந்தமான தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள இத்தொழிற்சாலையில், தெர்மாமீட்டர் தயாரிப்பின் போது உடையும் கண்ணாடிகளை வெளியே கொட்டி விடுகின்றனர்.
இந்த கண்ணாடிகளில் மெர்க்குரி(பாதரஸம்) கலந்து இருப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டை கூறியுள்ள பழனி மலை பாதுகாப்புக்குழு எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும்நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
இந்த அமைப்பு தான் தமிழக அரசியலை கலக்கிய கொடைக்கானல் பிளசண்ட ஸ்டே ஹோட்டல் வழக்கிற்கு காரணமாகும். விதிமுறைகளை மீறி,ஹோட்டலில் அதிக தளங்கள் கட்டப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்படும் என கூறி தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பையும் பெற்றது.
கொடைக்கானலின் மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பாதரஸக் கழிவுகள்மழைநீரால் அடித்து செல்லப்பட்டு நீரோட்டத்தில் கலந்து விடுகிறது.
இந்த நீரோட்டம் வைகை நதியில் கலப்பதால், மதுரை உள்ளிட்ட பல தென்கிழக்கு மாவட்டங்களில் குடிநீர் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியது.
இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பாதரஸத்தால் கிட்னி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇந்நிறுவன பணியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்நிறுவனத்தின் கழிவு கண்ணாடிகளை தமிழகத்தில் பல வளையல் உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிறுவனம், தொழிற்சாலையின் செயல்பாடு பற்றி ஆராய்ந்த பின், கழிவுகள் வெளியேறுவது பற்றிதெரிய வந்தால் அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications