ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி விலக தேவையில்லை: தே.ஜ கூட்டணி முடிவு
டெல்-லி:
ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிராகரித்தனர்.
ஆயுதப் பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்கா-ரு லட்சுமண் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் புதன்கிழமை மாலை4.30 மணிக்குக் கூடியது.
கூட்டம் முடிந்ததும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்குப் பொறுப்பேற்று ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. வாஜ்பாய் அரசுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தொடரும். இவ்வாறு கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications