தொகுதி ஒதுக்கீடு: அதிருப்தியில் கொங்கு நாடு மக்கள் கட்சி
திருப்பூர்:
தி.மு.க அணியில் உள்ள கொங்குநாடு மக்கள் கட்சியினர் தங்கள் கோரிய தொகுதியை தி.மு.க தலைவர்கருணாநிதி ஒதுக்கீடு செய்யாததால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள் தி.மு.க வில் இடம் பெற்றுள்ளன. சாதிஅடிப்படையிலான கட்சியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் ஆரம்பித்த கட்சிக்கும் கருணாநிதி ஒரு இடத்தைஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
ஒட்டன்சத்திரம், அல்லது பல்லடம் தொகுதியை தர வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேச்சு வார்த்தை நடத்தமுடிவு செய்யப்பட்டது என கொங்கு வெள்ளாளக் கவுண்டர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கீடுசெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியும் தங்களுக்கு உரிய, கோரிய தொகுதிகிடைக்காததால் பெரும் அதிருப்தியில் உள்ளனர். பாலக்கோடு தொகுதியில் மிகவும் குறைவான கொங்குவெள்ளாளக் கவுண்டர்கள் உள்ளனர். எனவே, அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு எனக்கருதுகின்றனர்.
எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் போட்டியிட முடியாத சூழ்நிலையில், ஒதுக்கப்பட்டதொகுதியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என












Click it and Unblock the Notifications