கருணாநிதியின் செல்ல நாய் வாடா
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி வாடா என உரிமையுடன் அழைத்தால் வாலாட்டி கொண்டே வரும் ஒரு வி.ஐ.பி,அண்ணா அறிவாலயத்தில் தங்கியிருக்கும் ஒரு நாய்.
அறிவாலயத்தை தினமும் வலம் வரும் கருணாநிதிக்கு துணையாக கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தவை 3நாய்கள். அவற்றில் ஒரு நாய் மட்டுமே இன்றைக்கும் அவரை தொடர்கிறது.
தினமும் அவருடன் வரும் அந்த நாய்க்கு கருணாநிதி பிஸ்கட் அளிப்பது வழக்கம். அவ்வாறு பிஸ்கட் கொடுக்கமறந்து விட்டால் அவரை அறிவாலயத்தை விட்டு நகர விடாது.
அந்த அளவிற்கு நெருக்கமான அந்த நாய்க்கு கருணாநிதி வைத்துள்ள பெயர் வாடா. கருணாநிதியின் அன்புபிடியில் இருக்கும் இந்த நாய் அறிவாலயத்திலேயே தங்கி கொள்ளும்.
அறிவாலயத்தின் காவலாளிகள் இதனை வெளியில் துரத்துவதில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் வரும் திமுகஉடன்பிறப்புகள் யாரும் இந்த நாயால் பாதிக்கப்பட்டது இல்லை.
அறிவாலயத்தின் கல்யாண மண்டபத்தில் திருமணத்தை நடத்துபவர்களுக்கு இந்த நாயின் குட்டிகள் தொந்தரவாகதெரிந்ததால் மாநகராட்சிக்கு புகார் அனுப்ப, அவர்களும் வந்து இவற்றை பிடித்து சென்று விட்டனர்.
இதனை அறிந்த திமுக உடன்பிறப்புகள் மாநகராட்சியினரிடம் போராடி அவற்றை மீட்டு வந்ததாகஅறிவாலயத்தின் காவலாளிகள் தெரிவிக்கின்றனர்.
அறிவாலயத்திற்கு அடிக்கடி வந்து போகும் திமுக உடன்பிறப்பு ஒருவர், இந்த நாய் யாரையும் பார்த்து குரைக்காது.இரவு நேரங்களில் அறிவாலயத்தை சுற்றி வந்து தனது வாட்ச் மேன் வேலையை கவனிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications