வெயில் கொடுமைக்கு பலியான தலைமை ஆசிரியை
மேலப்பாளையம் (திருநெல்வேலி):
வெயில் கொடுமை தாங்காமல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சூரியக் கதிர்கள் சுட்டெரித்து வருகின்றன. சித்திரை மாதம்கத்திரி வெயில் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக வெயிலின் கொடுமை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த வெயிலுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலப்பாளையம் ஆன்மிபுரத்தில் இருக்கும் ரகுமானியா பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர்எஸ். மல்லிகா (வயது 54).
இவர் திருநெல்வேலி டவுனில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பேருந்து மூலம் மேலப்பாளையத்துக்கு வந்தார்.
பழைய சந்தை பஸ் ஸ்டாப்பில் இறங்கி பள்ளி நோக்கி நடந்து செல்லும் போது வெயிலின் கடுமை தாங்காமல்ரோட்டில் மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்மல்லிகா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து போனார்.