நானே முதல்வர் என்கிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

கோவை:

அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால் நானே முதல்வர். தொண்டர்கள், மக்களின்விருப்பமும் இதுவே என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:

எனது நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் நான் வருத்தமடையவில்லை. மாறாக மகிழ்ச்சியேஅடைகிறேன். நான் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு ஏற்கப்பட்டிருந்தால் ஓரிரு இடங்களில்போட்டியிட்டியிருப்பேன்.

ஆனால், இப்போது நிராகரிக்கப்பட்டதால் 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன், பிரசாரம்மேற்கொள்கிறேன். நானே அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்.

அதிமுக கூட்டணியில் அனைத்து பொறுப்புகளும், கடமையும் எனக்குத் தான் உள்ளது. அனைத்திற்கும் என்னையேமுதன்மைப்படுத்துகின்றனர். இது பழகி விட்டது. எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது எனக்குஅதிக முக்கியத்துவம் இருந்தது. அதற்கேற்ப எனக்கு பொறுப்புகளும் கடமைகளும் இருந்தது.

தற்போது திமுக ஆட்சியில் மதவாதம், தீவிரவாதம் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்து விட்டது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் கொப்பரைத் தேங்காய்ஊழல், மருத்துவக் கருவிகள் வாங்குவதில் ஊழல், விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதில் ஊழல், சந்தனக்கிடங்கை எரித்து ஊழல், என எல்லமே ஊழல் மயமாகி விட்டது.

உங்களுக்காக என்னையே அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன். மக்களாகிய நீங்கள் வழங்கும் தீர்ப்பு தான்இறுதியான தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்பேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+