தற்காலிக சபாநாயகரானார் அப்துல் லத்தீப்
சென்னை:
தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக இந்திய தேசிய லீக் கட்சியின் எம்.அப்துல் லத்தீப் பதவியேற்றார்.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்து முடிந்து, புதிய கூட்டம் துவங்கவுள்ளது. இந்த நிலையில், புதியஎம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பொருட்டு தற்காலிக சபாநாயகராக மூத்த உறுப்பினரானஅப்துல் லத்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அப்துல் லத்தீபுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். 24-ம்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கிறது. 25-ம் தேதி ஆளுநர் உரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications