காஷ்மீர் செல்கிறார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்சனிக்கிழமை ஸ்ரீநகர் செல்கின்றனர்.
ஸ்ரீநகர் செல்லும் அவர்கள் காஷ்மீரில் சண்டைநிறுத்தத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்துஆராய்வார்கள்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் வரை சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்என்றே மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு தூதர் கே.சி.பந்த் ஏற்கனவே காஷ்மீர் சென்றுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை ஸ்ரீநகர் செல்லும் மத்திய அமைச்சர்கள் அத்வானி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர்சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுவது குறித்து சனிக்கிழமை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications