ஜம்மு அருகே பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்திலிருந்து ஜம்முவை நோக்கி சனிக்கிழமை காலை பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சூரன்கோட் அருகே காட்ரா மார்க் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிழுந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள்அனைவரும் ஜம்முவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications