சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்தார் ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. ஜூன் 1ம் தேதிமுடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் பாத்திமா பீவியின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து உரை மீது விவாதம்நடந்தது. இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தை முறையாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி வெள்ளிக்கிழமைஉத்தரவு பிறப்பித்தார். அது அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications