திருச்சி மாணவி ஏகம்மை மாநிலத்தில் முதலிடம்
திருச்சி:
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் திருச்சி சாவித்திரி வித்யாசாலா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏகம்மை மாநிலத்தில்முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலைவெளியிடப்படுகிறது.
மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பாராட்டிப் பேசுகிறார்.
மாநிலத்தில் முதலிடம்:
திருச்சி சாவித்ரி வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
இவரது தந்தை பெரியண்ணன் (56) சினிமா பட விநியோகஸ்தர். திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில்தெருவில் வசித்து வரும் ஏகம்மை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது குறித்துக் கூறியதாவது:
மாவட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நம்பியிருந்தேன். ஆனால் மாநிலத்திலேயே முதலிடம் கிடைத்ததுமிகவும் சந்தோஷமாக உள்ளது. இதற்காகப் பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்.
தினமும் காலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் படித்தேன்.அதற்கு பலன் கிடைத்து விட்டது.
டாக்டராகி ஏழை, எளியவர்களுக்கு உதவுவதே எனது குறிக்கோளாகும் என்றார். இவர் 6 ம் வகுப்பு முதல்தொடர்ந்து அனைத்து தேர்விலும் முதலிடம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகம்மை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி பாராட்டுதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications