For Daily Alerts
Just In
டாக்டராவேன்..சாதனை மாணவி கலையரசி
திண்டுக்கல்:
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் திண்டுக்கல் புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.எஸ்.கலையரசிமாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கலையரசியின் தந்தை எம்.சண்முகம் கடந்த 25 ஆண்டுகளாக திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார்மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தாய் செளந்தர மீனாட்சி.
சகோதரி எம்.எஸ்.மணிமொழி. இவர் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.
மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள கலையரசி, டாக்டருக்குப் படிக்க விருப்பம் உள்ளதாகத்தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, June 18, 2001, 5:30 [IST]