சர்ச் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள ஒரு சர்ச்சில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துசேதமடைந்தன. அப்போது சர்ச்சிற்குள் இருந்த பாதிரியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூரிலிருக்கும் சர்ச்சில் கடந்த புதனன்று மாலை பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டம் முடிந்த பிறகு ஜெபக் கூட்டம் நடத்திய பாதிரியார் ராஜன் மட்டும் அங்கேயே தங்கி விட்டார்.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில் சர்ச்சில் திடீர் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ராஜன் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினார். இவர் அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்களையும் தட்டி எழுப்பியுள்ார்.
இந்த தீ விபத்தில் சர்ச்சில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது.
இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications