சட்டப்படிப்புக்கு சட்ட மாணவர்கள் எதிர்ப்பு
கோவை:
அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பைத் தொடங்குவதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ளசட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், சட்டப் படிப்பைத் துவங்க கடந்த 3 ஆண்டுகளாக முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் இதற்குக்கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், இப்பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும்,தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி துவங்க வேண்டும் எனில், அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகமோ இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவாதிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்கு முடிவு இன்னும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் இப்பிரச்னையை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜம்மாள் தேவதாஸ்தொடங்கியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விரைவில் இங்கு சட்டப் படிப்பைத் துவங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போதுள்ள மாநில அரசு இதற்குஉதவும் எனக் கருதுகிறோம்.
மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக செவிலியர் பட்டப் படிப்புத் துவங்க முடிவு செய்துள்ளோம்.
இப் பல்கலைக் கழகத்தில் தற்போது 4,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இன்ஜினியரிங் கல்லூரியில்புதிதாக பி.இ. சுற்றுச் சூழல் இன்ஜினியரிங், பி.இ. இன்பர்மேஷன் டெக்னாலஜி, எனர்ஜி சயின்ஸ் ஆகிய பாடங்கள்துவங்கப்படும். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பிற்கும் அனுமதி கோரியுள்ளோம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன், ரூ.4.25 லட்சம் செலவில் பல்கலைக்குப் புதிய கட்டடங்கள்கட்டப்படும். மேலும், இங்கு ரூ.2.8 லட்சம் செலவில் யோக மையம் செயல்படுத்தப்படும் என்றார் ராஜம்மாள்தேவதாஸ்.












Click it and Unblock the Notifications